Thursday, 16 November 2017

அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், மணமேலல்குடி ஒன்றியம், அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 61 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிாியர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர்,  அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், காரக்கோட்டை சேது, வர்த்தக சங்க தலைவர்  ஜெயராமன், இன்சார், பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.