Thursday, 3 December 2020

புரவி புயல் பாதிப்பு பகுதிகள் ஆய்வு

         புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் வட்டம் முத்துக்குடா முதல் மணமேல்குடி வட்டம் கோட்டைப்பட்டிணம், புதுக்குடி, அம்மாபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், கட்டுமாவடி வரையுள்ள கடற்கரை பகுதிகளில் புரவிப் புயலின் தாக்கம் மற்றும் முன்னெச்சாிக்கை பாதுகாப்பு குறித்தும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.