Friday, 22 January 2021

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியினை அறந்தாங்கி தொகுதியின் தூண்டா மணிவிளக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து மாணவ, மாணவிகளிடத்தில் சிறப்புரையாற்றிய போது.

    அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 271 மாணவர்களுக்கும், அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 370 மாணவிகளுக்கும், நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கும், கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 51, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 122, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 223, அம்மாபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 53, கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 37, கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 37, மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 67, ஆக மொத்தம் இன்று மட்டும் 1351 விலையில்ல மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியினை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

                நிகழ்ச்சியில் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் ரூ.5 ஆயிரம் ரெக்கம் மற்றும் பாராட்டுதலும் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியைகள், ஆசிாியர்கள், நகர கழக செயலாளர் ஆதிமோகன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர், மண்டலமுத்து, தாயுமாணவன், செல்வம், மனோகரன், முகமது ஹாரிஸ், மார்கண்டேயன், மாறன், ராசு, கலா, ரமா, முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.