புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், வெட்டியல் ஊராட்சி குமரப்பன்வயல் கிராமத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்து மாாியம்மன்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நெடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளருமான இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்தனர்.
Saturday, 28 April 2018
குமரப்பன்வயல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், வெட்டிவயல் ஊராட்சி குமரப்பன்வயல் கிராமத்திலுள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதை மாவட்ட கழக அவைத்தலைவரும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களிடம் கோாிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோாிக்கையை ஏற்று 2016-17 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று திறப்புவிழா மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)








