Saturday, 25 February 2017

ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் மிதிவண்டி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையார்கோவில், கரூர் மற்றும் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
          அருகில் பள்ளி தலைமை ஆசிாியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிாியர் கழக தலைவர்கள், ஒன்றிய கழக செயலாளர், தொகுதி கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.














அறந்தாங்கியில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர கழக சார்பில் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை அருகில் நடைபெற்றது.

      விழாவில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை மற்றும், தையல் இயந்தரம் -10 நபர்களுக்கு, சலவைப் பெட்டி -10 நபர்களுக்கும் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை அறநந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம் ஏற்பாடு செய்தார். விழாவில் 1000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 












அறந்தாங்கி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மதிவண்டி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 176 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, தலைமை ஆசிாியர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.
        அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணயபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 206 மாணவர்களுக்கும், சுப்பிரமணியபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 293 மாணவிகளுக்கும் இதே போல் நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.