டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக அறந்தாங்கி நகரத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர செயலாளர் ஆதிமோகன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேலாயுதம், வட்ட கழக நிர்வாகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



















