Tuesday, 29 September 2020

மீமிசலில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் ஊராட்சி மீமிசல் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான புதிய பேருந்து நிலையத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும். பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.3 லட்சமும் ஆக மொத்தம் ரூ.18 லட்சம் திப்பில் புதிய பேருந்து நிலையத்தை கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார்.

      உடன் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் தற்டபோதைய ஒன்றிய குழு உறுப்பினருமான ஜோதி, மீமிசல் பகுதி கழக நிர்வாகிகளும், ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
















Friday, 25 September 2020

குன்னூர் ஊராட்சி முதுவளர்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

         புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், குன்னூர் ஊராட்சி முதுவளர்க்குடி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடையை கட்டி திறந்து வைத்து பேசினார். 

   நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் கருப்பையா, தொண்டைமானேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பாரத், வேட்டனூர் ஊராட்சி மன்ற தலைவர், பலவரசன் ஊராட்சிமன்ற தலைரவர் சொக்கலிங்கம், ஊர் அம்பலம் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் அய்யப்பன், கழக நிர்வாகிகள், இளைஞர்கள்,  கிராம பொதுமக்கள் மகளிர் பலர் கலந்து கொண்டனர்.













Tuesday, 22 September 2020

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்

 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் 167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழாவினை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

        விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், மற்றும் அமைச்சர்கள், இராமநாதபுரம் பராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.  





Saturday, 19 September 2020

தமிழக முதல்வாிடம் மணமக்கள் ஆசிவாதம் பெற்ற பொழுது

         புதுக்டகோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் மகன் இர.ஏகாம்பரஈஸ்வர் MCAக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இ.கம்பன் அவர்களின் மகள் க.இளவஞ்சி நாச்சியார் B.E -க்கும்  அண்மையில் திருமணம் நடைபெற்றது.  கொரோனா தொற்று நோய் பரவல் காலமாக இருந்ததால் எளிமையாக நடைபெற்றது. நேற்று 19.09.2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோாிடம் மணமக்கள் முகாம் அலுவலகத்தில் நோில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது. அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் அவரது மனைவி இர.சோபகி ஆகியோர் உடனிருந்தனர்.