புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அறந்தாங்கி எல்.எண்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மீராமைதீன், வேதபாபு, அய்யப்பன், கானூர் ராஜா, கருப்பையா மற்றும் ஜமாத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.






