Friday, 22 June 2018

பேரானூர் கிராமத்தில் கலையரங்கம் திறப்பு விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், பேரானூர் கிராமத்தில் அருள் புாியும் அருள்மிகு ஸ்ரீ 18ம் படி கருப்பர் சுவாமி ஆலயம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார்.
            விழாவில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுக்கள் பலர் கலந்து கொண்டனர்.