Thursday, 31 December 2020

விளானூர் ஊராட்சியில் புதிய ஆழ்குழாய் கிணறு பூமிபூஜை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், விளானூர் ஊராட்சி விளானூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையாக இருந்து வந்த குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் சீரிய முயற்சியில் 14 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் விளானூர் ஸ்ரீ அய்யனார்கோவில் அருகில் ரூ.19.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் அதே ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் மூலம் தனிநபர் குடியிருப்புக்கு பைப் லைன் இணைப்பிற்கான ரூ.7.65 இலட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், விளானூர் ஊராட்சி மன்ற தலைவர் க.சேதுபதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரன், சரண், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.