புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியிலும், ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

















