புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருகன் குளத்தில் இருந்த காந்திபூங்கா செயல்பாடற்று அறந்தாங்கி நகாில் பூங்கா இல்லாமல் மக்கள் பொிதும் அவதிப்பட்டு வந்தார்கள். மக்களின் நீண்டநாள் கோாிக்கையான காந்தி பூங்கா புரணமைக்கும் பணியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பூமிபூஜை செய்து முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுவதாகவும், பின் சட்டமன்ற உறுப்பினர் நிதி, வர்த்தசங்கம், போன்ற சங்கங்களின் நிதியையும் திரட்டி பூங்கா செயல்பாட்டிற்கு கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், கழக அவைத்தலைவர், பிள்ளைவயல் பஞ்சநாதன், வர்த்த சங்க நிர்வாகிகள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் மணிவாசகம், பழனிவேல் ராஜன், ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







No comments:
Post a Comment