புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து முடிக்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவினை அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்.
திருப்புனவாசல் ஊராட்சி
1. பூவடியேந்தல் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா.
2. பொய்யாதநல்லூர் பிள்ளையார்கோவில் ஊரணிக்கு ாிவிட்மெண்ட் மற்றும் படித்துறை கட்ட அடிக்கல் நாட்டு விழா
3. திருப்புனவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் பைப்லைன் விஸ்தாிப்பு மற்றும் புதிய சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா
புத்தாம்பூர் ஊராட்சி
1. மாதவனேந்தல் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
2. எழுகணிவயல் சர்ச் அருகில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
நிகழ்ச்சியில் ஆவடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நரேந்திரஜோதி, ஊராட்சிமன்ற தலைவர்கள், து.தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர் இளையராஜா, கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.























No comments:
Post a Comment