Tuesday, 20 December 2016

மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு புதுகையில் அஞ்சலி

         புதுக்கோட்டையில் மறைந்த முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

       இப்பேரணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டம்ன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
     
            மேலும் இந்திய மருத்துவ சங்கம், மாவட்ட வர்த்தக சங்கம், அண்ணா தொழிற் சங்கம், நகை வணிகர் சங்கம், புதிய பேருந்து நிலைய வணிகர்கள் சங்கம், கட்டப் பொறிியாளர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.
            இப்பேரணி பழைய பேருந்து நிலைய எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து, அண்ணா சிலை, பிருந்தாவனம், மேலராஜ வீதி, வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment