புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், அம்மாபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பிருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
விழாவில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன், இன்சார், காரக்கோட்டை சேது, பிரபு, பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மடிக்கணிணிகளை வழங்கிவிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியையும் துவக்கி வைத்தார். விழாவில் ஜமாத் தலைவர்களும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.








No comments:
Post a Comment