Friday, 2 February 2018

அறந்தாங்கி நகராட்சியில் சாலை பணிகள் துவக்க விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியில் தமிழ அரசின் மூலம் ரூ.3 கோடி நிதி பெற்று அறந்தாங்கி நகராட்சியிலுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அறந்தாங்கி கம்மங்காடு சாலை மற்றும் ஜெ.ஜெ.நகர் மணிவிளான் 5வது தெரு ஆகிய பகுதிகளில் பூமி பூஜை செய்து சாலை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். 
             நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செலாளர் செல்வராஜ்,  நகர துணை செயலாளர் கனி, சேக் பஷீர், நகர அவைத்தலைவர், மீராமைதீன் நகர பொருளார், சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செலாளர் மணிவாசகம், வட்ட கழக செலாளர் பழனிவேல்ராஜன், வேதபாபு, காந்தி, கருப்பையா, தனபால், வாசு, கணேசன், செந்தில் விரகொண்டார், இடையார் ரவிச்சந்திரன், சுப்பிரமணியபுரம் இளையராஜா, கொடிவயல் அடைக்கலம், சுப்பிரமணியன், பகுதி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 































No comments:

Post a Comment