புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மக்கள் தொர்பு முகாமில் 283 பயனாளிகளுக்கு ரூ.42.51 லட்சம் மதிப்பீ்ட்டீல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது.
கோட்டைப்பட்டிணம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 50 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை தங்கள் இருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாமல் இருந்தது. முன்னதாக 2000 வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 800 நபர்களுக்கு தங்கள் வசிப்பிடத்திற்கு உாிய வீட்டுமனைப் பட்டா வழங்க்கப்பட உள்ளது என்றும் அதும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வருவாய்த் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் கோாிக்கையை ஏற்று அறந்தாங்கியிலிருந்து வரும் பேருந்துகள் கோட்டைப்பட்டினம் வரை நீட்டிப்பு செய்ய உாிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசினார்.







No comments:
Post a Comment