புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் இன்று 2வது நாளாக வார்டு 8 களபக்காடு மெயின் ரோடு, வார்டு 3 அண்ணாநகர், வார்டு 20 எல்.எண்.புரம், வார்டு 19 இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று வார்டு பகுதிகளிலுள்ள குறைகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கேட்டறிந்தார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாகம், மாவட்ட சிறுபான்மை பிாிவு செயலாளர் லியாக்கத்அலி, அறந்தாங்கி நகர கழக செயலாளர் ஆதிமோகன், ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, நகராட்சி ஆணையர் (பொ), நகராட்சி பொறியாளர், மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













No comments:
Post a Comment