புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் மூலம் இலவச மருத்துவ முகாமை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்வரன், வட்டார மருத்துவர் முத்துராஜா, ஏம்பல் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், கிராம பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் மருத்துவ உபகரணங்கள், அம்மா பாிசு பெட்டகம் உள்பட பல பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.













No comments:
Post a Comment